News October 10, 2025
தென்காசியில் லஞ்சம் பெற்ற விஏஓ – கைது!

தூத்துக்குடி மாவட்டம், சண்முகவேலுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் சங்கரன்கோவில் அருகே பெரியூரில் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள கூட்டுப் பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற வி.ஏ.ஓ. ராஜ்குமார், ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 7, 2025
தென்காசி: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

கடையம் அருகே காசிவிஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). இவர் நேற்று தனது வீட்டு மாடுகளை கட்டிவிட்டு வருகையில் கால் வழுக்கி அருகில் இருந்த கம்பியை பிடித்துள்ளார். அதில் மின்கசிவு இருந்த காரணத்தால் மின்சாரம் தாக்கியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அம்பை G.H-க்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இசக்கிமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு.
News December 7, 2025
தென்காசி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. FREE

தென்காசி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News December 7, 2025
தென்காசியில் அப்ரண்டீஸ் மேளா.. கலெக்டர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தின் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரி தேசியத் தொழில் பழகுனர் அப்ரண்டீஸ் மேளா, தென்காசி அரசு தொழில் பயிற்சி நிலையத்தின் சேர்க்கை முகாம் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. பயிற்சி காலத்தில் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.9,600 முதல் ரூ.12,500 வரை வழங்கப்படும். இந்த தகவலை தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.


