News October 1, 2025
தூத்துக்குடி மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் பொருட்களை சப்ளை செய்வதற்கு மற்றும் டெலிவரி செய்வதற்கு லாரிகள் தேவைப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதற்கான ஒப்பந்தத்தை இணையத்தின் வாயிலாக 2ம் தேதி காலை 10 மணி முதல் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் திருத்தங்கள் மற்றும் மாறுதல்கள் இருப்பின் அந்த இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
தூத்துக்குடி: ரேஷன் கார்டு இருக்கா.? முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறித்த குறைதீர் முகாம் நாளை (13.12.2025) நடக்கிறது. வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில், நாளை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும். இம்முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர், முகவரி திருத்தம் போன்றவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். தெரியாதவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News December 12, 2025
தூத்துக்குடி: பார்சலில் வந்த 112 கிலோ புகையிலை

தூத்துக்குடி தென்பாகம் போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் நேற்று திடீர் சோதனை செய்தனர். அப்போது, பெங்களூரில் இருந்து 5 பார்சல்களில் 112 கிலோ புகையிலை பொருள்கள் வந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார், இந்த பார்சல்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 12, 2025
அமைச்சர் வழக்கில் அமலாக்கத்துறை மனு நிராகரிப்பு

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தங்களையும் ஒருவராக மனுதாருடன் சேர்த்துக் கொள்ள அமலாக்கத்துறையினர் நேற்று அளித்த மனுவை நீதிபதி இன்று நிராகரித்தார்.


