News October 12, 2025

தூத்துக்குடி துறைமுகம் இனி பசுமை ஹைட்ரஜன் மையம்

image

இந்தியாவில் பெரிய துறைமுகங்களில் ஒன்றாக தூத்துக்குடியில் வ உ சி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை ஹைட்ரஜன் மையங்களாக மேம்படுத்த மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் கப்பல் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

Similar News

News December 5, 2025

கம்பால் அடித்து கொலை செய்த 2 பேருக்கு ஆயுள்

image

ஆறுமுகநேரி அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசூசை ராஜ். இவரை கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிலிவிங்ஸ்டன், அன்றோ ஆகியோர் முன் விரோதம் காரணமாக கம்பில் அடித்து கொலை செய்தனர். இது பற்றி திருச்செந்தூர் போலீசார் இருவர் மீதும் தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அன்றோ, அந்தோணி லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News December 5, 2025

தூத்துக்குடிக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.5) தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 5, 2025

கொலை வழக்கில் சமூக சேவை செய்ய உத்தரவு

image

குளத்தூர் அருகே உள்ள வைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த சுப்பையா என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இளம் சிறார் ஒருவருக்கு 17 ஆண்டுகளுக்குப் பின் இன்று தூத்துக்குடி இளம் சிறார் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சமூக சேவை செய்ய உத்தரவிட்டது.

error: Content is protected !!