News November 19, 2025
தூத்துக்குடி கலெக்டர் பரபரப்பு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஒரு தொலைபேசி வழி செய்தியை அவசரமாக வழங்கியுள்ளார். அதன்படி வரும் 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய உள்ளதால் பல்வேறு அவசரகால பொருட்களை தயார் நிலையில் வைத்திடவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யவும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 24, 2026
தூத்துக்குடி: ரூ.3.44 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

புதூரில் முருகன் என்பவரது பெட்டிக் கடையில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட 50 புகையிலைப் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, புதூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, முருகனை கைது செய்த போலீசார், புகையிலை மற்றும் ரூ.3 லட்சத்த 44ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
News January 24, 2026
தூத்துக்குடி: Recharge செய்ய இனி Gpay, Phonepe தேவையில்லை!..

தூத்துக்குடி மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு, பிளான் வேலிடிட்டி மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், உங்க டேட்டா பேலன்ஸ் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News January 24, 2026
தூத்துக்குடி: பாலியல் வழக்கில் முதியவருக்கு சாகும் வரை ஆயுள்

2020ம் ஆண்டு திருச்செந்தூரை சேர்ந்த 16 வயது சிறுமியை தூத்துக்குடியை சேர்ந்த தங்கபாண்டி என்ற முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அச்சிறுமியின் பெற்றோரை தங்கபாண்டியின் மகன், மகள் மிரட்டியுள்ளனர். இது சம்பந்தமாக திருச்செந்தூர் போலீஸ் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தங்கபாண்டிக்கு மரணம் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.


