News November 19, 2025
தூத்துக்குடி கலெக்டர் பரபரப்பு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஒரு தொலைபேசி வழி செய்தியை அவசரமாக வழங்கியுள்ளார். அதன்படி வரும் 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய உள்ளதால் பல்வேறு அவசரகால பொருட்களை தயார் நிலையில் வைத்திடவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யவும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 20, 2026
தூத்துக்குடி: தாயை கொன்று கிணற்றில் வீசிய மகன்

விளாத்திகுளம் அருகே மிட்டாவடமலபுரத்தை சேர்ந்த பேச்சியம்மாள் ஜன.11 அன்று காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் கை, கால்கள் துணிகளாலும், உடல் கல் வைத்து கட்டப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் சொத்தை பிரித்து தரக்கோரி ஆத்திரத்தில் பேச்சியம்மாளின் மூத்த மகனான சக்திவேல், அவரது நண்பர் முருகன் ஆகியோர் கழுத்தை நெரித்து கொலை செய்து கிணறில் வீசியதாக தெரிவித்தது அதிர வைத்துள்ளது.
News January 20, 2026
தூத்துக்குடி: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

தூத்துக்குடி மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். <
News January 20, 2026
கோவில்பட்டி: மாமனாரை சரமாரியாக வெட்டிய மருமகன்

கங்கைகொண்டானை சேர்ந்த உலகநாதன் தனது மகள் செல்வியை(25) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாப்பாகுடியை சேர்ந்த கருப்பசாமிக்கு(30) திருமணம் செய்து கொடுத்துள்ளார். 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை உலகநாதன், செல்வி கயத்தாறுக்கு சென்ற போது அங்கு தகராறில் ஈடுபட்ட கருப்பசாமி அரிவாளால் உலகநாதனை வெட்டியதில் அவரது கட்டை விரல் துண்டானது.


