News October 10, 2025
தூத்துக்குடியில் காவல் நிலையம் முன்பு தற்கொலை

முள்ளகாட்டை சேர்ந்த சுவிசேஷ ராஜா பிரியாணி கடை நடத்தி வருகிறார். குடும்பத்த தகராறில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நேற்று இரவு முத்தையாபுரம் காவல் நிலையத்தில் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இது குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
தூத்துக்குடி: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா?

தூத்துக்குடி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை. இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.
News December 9, 2025
தூத்துக்குடி: மொட்டை மாடியில் தவறி விழுந்து தொழிலாளி பலி

முள்ளக்காடு அருகே உள்ள அத்திமரபட்டி பொன்னகரத்தை சேர்ந்தவர் முத்துமாரி (49). மரம் வெட்டும் தொழிலாளியான இவர், நேற்று தனது வீட்டு மொட்டை மாடியில் இருந்து அருகில் உள்ள பனை மரத்தின் ஓலைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் இடறி வீட்டின் கீழே இருந்த கழிவறையில் விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
News December 9, 2025
தூத்துக்குடி: புதிய வாக்காளர்கள் கவனத்திற்கு…

புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க இன்று (டிச.9, செவ்வாய்) முதல் விண்ணப்பிக்கலாம்.18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். தேவையான ஆவணங்கள்: 1.ஆதார் கார்டு, 2.போட்டோ 1, 3.பிறப்புச்சான்றிதழ், 4.பள்ளிச் சான்றிதழ் (TC), இன்று அருகில் உள்ள மையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.


