News January 12, 2025

துப்பு துலக்குவதில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு

image

புதுச்சேரியில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, கொள்ளை, சங்கிலி பறிப்பு, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. சீனியர் எஸ்பி கலைவாணன் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட போலீசாரை பாராட்டினார்.

Similar News

News November 14, 2025

காரைக்காலில் மின் கட்டணம் வசூல் மையம் இயங்கும்

image

மின் நுகர்வோர்கள் கவனத்திற்கு நாளை (15.11.2025) சனிக்கிழமை காரைக்கால் டவுன், தலைமை அலுவலகம், நேரு நகர், கோட்டுச்சேரி, நெடுங்காடு, அம்பகரத்தூர், திருநள்ளார், நிரவி மற்றும் திருமலைராயன்பட்டினம் மின் தொகை வசூல் மையம் காலை 8.45 முதல் மதியம் 1.00 மணி வரை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்படுகிறது. மின் கட்டண பாக்கியனை உடனடியாக செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 14, 2025

காரைக்கால் நிர்வாகம் சார்பில் வாக்காளர் உதவி மையம்

image

காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி 2026 நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான விவரங்களை பெற காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென வாக்காளர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 யை பயன்படுத்தியும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம், மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

புதுவை: அதிநவீன மிதவை கருவி சீரமைப்பு

image

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், கடல் நீரின் தன்மையை அறியும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி புதுவை துறைமுகத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அதிநவீன கருவிகள் பொருந்திய மிதவைகள் நிறுவப்பட்டுள்ளன. நேற்று அதிகாரிகள் படகில் சென்று, அந்த மிதவை எடுத்து கரைக்கு கொண்டுவந்து பெயிண்ட் அடித்து சேதமடைந்த பகுதியை சீரமைத்தனர்.

error: Content is protected !!