News August 8, 2025
துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் மன்னன் வேட்புமனு

சேலம்: மேட்டூர் அருகே குஞ்சாண்டியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்த பத்மராஜன்(65) துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இது இவரது 250ஆவது வேட்பு மனுத்தாக்கல் ஆகும். இதற்கு முன்பு 249 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 7, 2025
தாரமங்கலத்தில் துடிதுடித்து பலி!

இடைப்பாடி அருகே கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னம்மாள்(70). இவரது பேரன் அஜித்குமார் (25), கூலி தொழிலாளி. இவர்கள், நேற்று காலை சொந்த வேலையாக டூவீலரில் இளம்பிள்ளை புறப்பட்டனர். தாரமங்கலம் அருகே வந்தபோது, பின்னால் வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சின்னம்மாள், பேரன் கண் முன்பே துடி துடித்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 7, 2025
சேலம் வழியாக செல்லும் ரயில் சேவை நீட்டிப்பு!

ஹைதராபாத்தில் இருந்து சேலம், ஈரோடு,திருப்பூர், போத்தனூர் வழியாக கொல்லத்திற்கு வாராந்திர ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.ஜனவரி 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17ஆம் தேதி சனிக்கிழமை ஹைதராபாத்தில் இருந்து இரவு 11.10க்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 7.10க்கு கொல்லம் சென்று அடைகிறது. அதேபோல கொல்லத்திலிருந்து 19ஆம் தேதி காலை 10.45 க்கு புறப்பட்டு மறுநாள் மாலை 5.30க்கு ஹைதரபாத் போகிறது
News December 7, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்


