News October 18, 2025
தி.மலை மக்களே வீடுகளில் இனி இது கட்டாயம்!

தி.மலை மக்களே அடுக்குமாடி குடியிருப்புகளை போல தனி வீடுகளுக்கு பார்க்கிங் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில் 2 பைக், 2 கார்கள், 3,300 சதுரஅடிக்கு மேல் உள்ள வீட்டில் 4 பைக், 4 கார்கள் நிறுத்துமிடம் ஒதுக்குவது கட்டாயம் என விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
Similar News
News November 17, 2025
ALERT: தி.மலையில் கனமழை பெய்யும்!

தி.மலை மாவட்டத்தில் இந்து இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எனவே இன்று முதல் பரவலாக மழையை ஏதிர்பார்க்கலாம் மக்களே! முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
தி.மலை: அத்துமீறிய அரசு ஊழியர்..வாய் கூசாமல் வசைபாடல்!

தி.மலை மாவட்டம், சேத்துப்பட்டை சேர்ந்த கணவரை இழந்த, 35 வயது பெண், அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த சதீஷ்குமார், 36 மேல்வில்லிவலம் வி.ஏ.ஓ.,வாக உள்ளார். இவர் அந்த பெண்ணிடம் “நீ அழகாக இருகிறாய், நீ அழகாக இருக்கிறாய், எப்போது வருகிறாய் என்றும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என வாய் கூசாமல் கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
News November 17, 2025
தி.மலை: ரோந்து பணி விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் (16.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


