News November 19, 2025
தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கூடுதல் வசதி

உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் அடுத்த மாதம் கார்த்திகை டிச.3ஆம் தேதி மகா தீபம் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 4764 சிறப்பு பேருந்துகள் 11,293 நடைகளாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
தி.மலை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, பொங்கல் விடுமுறையின் போது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. இதுபோன்ற சமயத்தில் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தி.மலையில் உள்ளவர்களுக்கோ (அ) உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 9677398825 எண்ணில் புகார் செய்யலாம். ஷேர்!
News January 13, 2026
தி.மலை: விபத்தில் வாலிபர்கள் பலி!

தி.மலை, மொடையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜய் (25) மற்றும் விக்னேஷ் (16) நண்பர்களான இருவரும் மட்டபிறையூரிலிருந்து மொடையூர் கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போளூர் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
News January 13, 2026
தி.மலை: இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!

வந்தவாசி, தேசூா் பச்சையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரபாகா் (21) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமாா் (25) என்பவருக்கும் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரபாகா் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட 5 போ் பிரபாகரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தேசூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


