News November 19, 2025
தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கூடுதல் வசதி

உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் அடுத்த மாதம் கார்த்திகை டிச.3ஆம் தேதி மகா தீபம் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 4764 சிறப்பு பேருந்துகள் 11,293 நடைகளாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 22, 2026
தி.மலை அருகே பயங்கர தீ விபத்து

ஆரணியில் 33 வார்டுகள் உள்ளன. அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கு அமைத்து அங்கு குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அவ்வழியாக சென்றவர்கள் யாரோ அணைக்காத பீடி, சிகரெட் போட்டதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் 2 மணிநேரம் போராடி தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
News January 22, 2026
தி-மலை: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வேளாண்துறை, விவசாயத்துறை மற்றும் பிற சார்பு துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
தி-மலை: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வேளாண்துறை, விவசாயத்துறை மற்றும் பிற சார்பு துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.


