News October 1, 2025
தி.மலையில் பலே மோசடி; 2 கேடி லேடிகள் கைது

கண்ணமங்கலம் பகுதியில் உள்ள வங்கிகள் மற்றும் தனியார் அடகு கடைகளில் தங்கம் மூலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை தங்க நகைகள் என அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட வேலூர் சப்தலிபுரம் பகுதியைச் சேர்ந்த சுமதி, வேலூர் மாவட்டம் கீழ் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த புனிதா என்ற இரண்டு பெண்களை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து போலி கவரிங் நகைகளை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 14, 2025
தி.மலை: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

தி.மலை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <
News December 14, 2025
தி.மலை: டிராக்டர் மோதி பிளஸ்-2 மாணவர் பலி!

கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ்(17) பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில், நாய்க்கடிக்கு ஊசி போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மாணவர் லோகேஷ் மீது அந்த வழியாக ஜல்லிக்கற்களை ஏற்றி கொண்டு வந்த ஒரு டிராக்டர் எதிர்பாராதவிதமாக லோகேஷ் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லோகேஷ் பரிதாபங்க உயிரிழந்தார்.
News December 14, 2025
தி.மலை வரும் முதல்வர்!

திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14) மாலை 5 மணி அளவில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி கூட்டம் மற்றும் மண்டல அலுவலர் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.


