News January 12, 2025

திருவிடைமருதூர் பகுதியில் 1300 மது பாட்டில்கள் பிடிப்பு

image

கருப்பூர் மேலத்தெரு பகுதியில் சட்டவிரோதமாக காரைக்காலிலிருந்து பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பந்தநல்லூர் போலீசார் அந்த இடத்திற்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டதில் சுமார் 1300 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகளான அசோதமன் மற்றும் அனுசியா ஆகியோரை கைது செய்ததாக காவல் கண்காணிப்பாளர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

Similar News

News November 13, 2025

தஞ்சை மாவட்ட போலீசார் அதிரடி; 6 பேர்‌ கைது

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுக்கூர், பட்டுக்கோட்டை, நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 753 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப் பொருட்களை கடத்தி வைத்திருந்த திருநாவுக்கரசு, மகேந்திரன், கார்த்திக், அப்துல்லா, சுரேஷ், காமராஜ் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு ஈடுபட்ட வாகனங்களையும் பறிமுதல்.

News November 13, 2025

தஞ்சை: ஏர்போர்ட்டில் பணிபுரிய வாய்ப்பு – கலெக்டர்

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA – CANADA) பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!