News November 3, 2025
திருவாரூர்: ரூ.40 லட்சம் மோசடி செய்த நபர் கைது

மன்னார்குடி நாவல் பூண்டியைச் சேர்ந்த வாணிதாசன் (30) சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு வேலைகளுக்காக அனுப்பி வைக்கும் பணியை செய்துவருகிறார். அதன்படி சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறி கலைமணி என்பவரிடம் ரூ.22 லட்சம், சபரிசன் என்பவரிடம் ரூ.4.15 லட்சம், விக்னேஷ் என்பவரிடம் ரூ.5 லட்சம், தினேஷ் என்பவரிடம் ரூ.4 லட்சம் என மொத்தமாக ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக போலீசார் வாணிதாசனை கைது செய்துள்ளனர்.
Similar News
News November 11, 2025
திருவாரூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

திருவாரூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News November 11, 2025
திருவாரூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

டெல்லி செங்கோட்டையில் நேற்று கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததை ஒட்டி, திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் நேற்று இரவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக திருவாரூர் ரயில்வே போலீசார், ரயில்வே படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு போலீசார் ஆகியோர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் பயணிகளின் உடமைகள், ரயில் நிலையத்தின் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை சோதனை செய்தனர்.
News November 11, 2025
திருவாரூர் மக்களே இது முற்றிலும் இலவசம்

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர், இங்கே <


