News November 19, 2025
திருவாரூர்: மக்கள் பாதுகாப்பாக அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்பர் 19) திருவாரூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News January 21, 2026
திருவாரூரில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஷரணப்பா தல்வார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம் வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த சிறப்பு வாகனம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் பெறுதல், விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகளை எளிதாக பெற்று கொள்ளலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
திருவாரூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 21, 2026
திருவாரூர்: ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழையவலம் ஊராட்சியில் சுமார் 1,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகவும், வீட்டு உபயோகத்துக்காகவும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த குடிநீர், கடந்த ஓராண்டாக உப்பு நீராக வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், பழையவலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.


