News October 1, 2025

திருவாரூர்: புதிய அரசு மகளிர் கல்லூரியில் வாய்ப்பு!

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு மகளிர் கல்லூரியில் சேருவதற்கு இன்று (அக்.01) காலை 11 மணி முதல் மாணவிகள் சேர்க்கை துவங்கவுள்ளது. எனவே மன்னார்குடி மற்றும் சுற்றுப்புறப் பகுதி மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட நிர்வாகம், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் மூலமாக தெரிவித்துள்ளது.

Similar News

News December 11, 2025

திருவாரூர்: பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம்

image

திருவாரூர் மாவட்டம் செம்மங்குடி பகுதியில் டிசம்பர் 13-ம் காலை 10 மணி அளவில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் தொடர்பாக பொதுமக்களிடம் மனுக்களாக பெறப்படுகிறது. மேலும் இந்த முகாம் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News December 11, 2025

திருவாரூர்: இதற்கு இன்றே கடைசி

image

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி நவம்பர் 4 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளையும் வீடு வீடாக சென்று கணக்கிட்டு படிவங்களை பூர்த்தி செய்து நிரப்பி வாங்கும் பணிகள் நடைபெற்று, தற்போது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து படிவங்களை சமர்ப்பிக்காதவர்கள் இன்று (டிசம்பர் 11) மாலைக்குள் நிலை அலுவலரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News December 11, 2025

திருவாரூர்: மன்னார்குடி-சென்னை வந்தே பாரத் ரயில் இயக்க மனு

image

தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து தொகுதி தொடர்பான ரயில்வே கோரிக்கைகளை வழங்கினார். மன்னார்குடி-சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் நீடாமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கினார்.

error: Content is protected !!