News May 2, 2024

திருவாரூர்: தொழிலாளர் தின நிகழ்வில் அமைச்சர்

image

மன்னாா்குடி மதுக்கூா் சாலையில் உள்ள கும்பகோணம் கோட்ட அரசுப் போக்குவரத்து அலுவலகத்தில் தொ.மு.ச.சாா்பில் நேற்று நடைபெற்ற தொழிலாளா் தின நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்துகொண்டார். அப்போது, “திமுக ஆட்சியில் தொழில் மூதலீடு மூலம் 31 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Similar News

News December 10, 2025

திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சியை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

image

பாஜக IT WING மாநில செயலாளர் சதீஷ்குமார் முகநூலில் திருப்பரங்குன்றம் சம்பந்தமாக பதிவிட்ட பதிவிற்காக கம்யூனிஸ்ட் கட்சியினர், அவரின் அலுவலகத்தில் புகுந்து தாக்க முற்பட்டதாகவு; இது தொடர்பாக பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களின் மீது வழக்கு பதிந்தும் இதுவரை கைது செய்யாமல் காவல்துறையினர் உள்ளதாகவும் கூறி, இன்று பேரளம் கடைதெருவில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

News December 10, 2025

திருவாரூர்: சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடம்!

image

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என அனைவராலும் அறியப்படும் காவிரி ஆற்றின் டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் திருவாரூர் மாவட்டம், சோழ சாம்ராஜ்யத்தின் 5 பாரம்பரிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருவாரூர் தலைநகரமாகவும், தியாகராஜர் கோயிலின் இருப்பிடமாக இருப்பதால், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்துள்ளது. இதனால் திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடமாக விளங்கியது.

News December 10, 2025

திருவாரூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை அனைவருக்கும் ஷேர் செய்ங்க.

error: Content is protected !!