News October 11, 2025

திருவாரூர்: டூவீலர் விபத்தில் 2 பெண்கள் படுகாயம்

image

கொரடாச்சேரி அருகே உள்ள ஆர்ப்பாவூரை சேர்ந்தவர் அறிவழகி (39). இவர் தனது உறவினர் தமிழ்ச்செல்வியுடன் ஒரு ஸ்கூட்டரில் திருவாரூர்-தஞ்சை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவிடவாசலைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்த டூவீலரும், அறிவழகி ஓட்டி சென்ற ஸ்கூட்டரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அறிவழகி, தமிழ்ச்செல்வி ஆகியோர் படுகாயமடைந்து திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

Similar News

News November 13, 2025

திருவாரூர்: மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

image

நீடாமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது மாணவியை அதே பகுதியில் கைப்பேசி கடையில் வேலைபாா்த்து வரும் கெளதம் என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கௌதம் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அடுத்து மகள் கர்ப்பமானதை அறிந்த பெற்றோர் மன்னார்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கௌதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 13, 2025

திருவாரூர்: சீமாட்டி ஜவுளி நிறுவனத்தில் வேலை!

image

திருவாரூர் நகரில் அமைந்துள்ள சீமாட்டி ஜவுளி நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12-ம் வகுப்பு முடித்த, ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.14,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.

News November 13, 2025

திருவாரூர்: மின்சாரம் தாக்கி வெல்டர் உயிரிழப்பு

image

காரியங்குடி பகுதியில் அடகுக் கடை ஒன்றில் ரஞ்சித், மணிகண்டன், சந்தோஷ் ஆகியோர் நேற்று வெல்டிங் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் மணிகண்டன், சந்தோஷ் ஆகிய இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருவாரூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!