News September 30, 2025
திருவாரூரில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், FL11 உரிமம் பெற்ற கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் வருகிற 02.10.2025-ம் தேதி அன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய நாள் மது பானங்கள் விற்பனை இல்லாத உலர் நாளாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 9, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (டிச.08) இரவு 10 மணி முதல் இன்று (டிச.09) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News December 8, 2025
திருவாரூர் மத்திய ப.கழகத்தில் 22 புதிய படிப்புகள்

தேசிய கல்வி கொள்கை வழிகாட்டுதல் படி வருகின்ற கல்வியாண்டில் 22 புதிய இளநிலை பட்டப் படிப்புகள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த படிப்புகளில் சேர மத்திய பல்கலைக்கழகங்களுக்கான சேர்க்கை நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்றும் இந்த தேர்வு தமிழில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
திருவாரூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு திருவாரூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!


