News November 19, 2025
திருவள்ளூர்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள 124 ’Management Trainee’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News January 25, 2026
திருவள்ளுர்: வெவ்வேறு விபத்துகளில் இருவர் பலி!

பெரியபாளையம் பகுதியில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் வாலிபர் மற்றும் பெயிண்டர் என இருவர் உயிரிழந்தனர். காய்கறி சந்தைக்குச் சென்ற புகழேந்தி (22) லாரி மோதியும், மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய பெயிண்டர் சாமிநாதன் (38) சரக்கு வேன் மோதியும் பலியாகினர். காயமடைந்த குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய ஓட்டுநர்களைப் பெரியபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
News January 25, 2026
திருவள்ளூர்: மரத்தில் தொங்கிய ஆண் சடலம்!

செங்குன்றம் அடுத்த காந்தி நகரைச் சேர்ந்த கேரள இளைஞர் சந்தீப் (33), குடும்பப் பிரச்சினை காரணமாக நேற்று மாலை இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், அவர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 25, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


