News July 5, 2025

திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறப்பு

image

திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் 5 ஏக்கரில் இந்த திட்டம் 2023 ஜூலை தொடங்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகள் இயக்கத்துக்கு, வசதியாக அடிப்படை கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்ப்பு.

Similar News

News November 8, 2025

திருவள்ளூர்: கஞ்சா கூடமாக மாறிய பேருந்து!

image

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் போலீசார் (நவ.7) வாகன சோதனை செய்தனர். அப்போது, ஆந்திர மாநில நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்தை நிறுத்தி, பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர். அதில் பயணித்த, திருநெல்வேலி தெற்குபட்டி சேர்ந்த ஈசாக்ராஜ் (19) என்பவரிடம், 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆரம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 8, 2025

கும்மிடிப்பூண்டி ‌நாளை சிறப்பு‌ மருத்துவ‌முகாம்

image

திருவள்ளூர் மாவட்டம்”நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்” நாளை‌ 08.11.2025 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை நடைபெற‌ உள்ளது.இதில் சிறப்பு மருத்துவ சேவைகள்,மாற்றுத்திறனாளி‌சான்றிதழ்‌ இலவசமாக வழங்கபடவுள்ளன.இம்முகாமினை‌ ஏழை‌ எளிய‌ மக்கள் கலந்து கொண்டு ‌பயன்அடையுமாறு‌ அரசு‌ சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News November 7, 2025

திருவள்ளூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!