News April 5, 2024
திருவள்ளூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளர் பாலகணபதி உட்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மெய்யூர் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாலகணபதி தேசிய கொடியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேளகாபுரம் வருவாய் ஆய்வாளர் பாலாஜி அளித்த புகாரின்பேரில் பாலகணபதி, பாஜக மாவட்ட தலைவர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
சந்திரயான்-4 தரையிறங்கும் இடத்தை தேர்வு செய்த ISRO

சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து, ISRO அடுத்த நடவடிக்கைக்கு தயாராகி உள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான்-4 விண்கலம் தரையிறங்கும் இடத்தை தேர்வு செய்துள்ளது. 2028-ல் ஏவப்படவுள்ள சந்திரயான்-4, நிலவிலிருந்து மாதிரிகளை பூமிக்குத் கொண்டு வரும் திட்டம். மேலும், சரியான தரையிறங்கும் தளத்தை தேர்வு செய்வது திட்டத்தின் வெற்றிக்கு மிக அவசியம் என்று ISRO அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News February 10, 2026
காங்கிரஸை சீண்டிய அமைச்சர் ராஜகண்ணப்பன்

கூட்டணி ஆட்சி தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையே அவ்வப்போது வார்த்தைப்போர் வெடித்து வருகிறது. இந்நிலையில் எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது என மீண்டும் காங்கிரஸை அமைச்சர் ராஜகண்ணப்பன் சீண்டியுள்ளார். 150 இடங்களில் திமுக வெற்றிபெற போகும் நிலையில், எப்படி ஆட்சியில் பங்கு கொடுக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 10, 2026
தம்பதியரே, உங்கள் உறவில் விரிசலா?

தம்பதியர் உறவில் விரிசல் தொடங்கி விட்டதை உணர்த்தும் அறிகுறிகள்: *நெகடிவாகவே தொடங்கும் பேச்சு *பிரச்னைகளை கவனிக்காதது போல் இருத்தல் *சண்டை போடுவதை திடீரென நிறுத்தி சைலன்ட் ஆவது (அ) சாதாரண சண்டைகூட பெரிதாக மாறுவது *காதல் வந்த ஆரம்பக் காலத்தை மறத்தல் *எப்போதும் மோசமானதையே நினைப்பது *எப்போதும், எதிலும் குறை சொல்லுதல் *விலகிவிட்ட உணர்வு, ஏக்கம் *துணைவர் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை கற்பனை செய்தல்.


