News November 25, 2025
திருவள்ளூர்: கர்ப்பிணிப் பெண்மணி தற்கொலை!

பொன்னேரி: சோழவரம் அருகே திருமணமாகி மூன்று மாதத்தில் கர்ப்பிணி பெண்மணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்போது, சோழவரம் காந்தி நகரைச் சேர்ந்த ராகுல்(30) என்பவருடன் காதல் ஏற்பட்டது. குடும்ப பிரச்னையால் கடும் மன உளைச்சலில் இருந்த நந்தினி நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண் டார்
Similar News
News January 18, 2026
ஆவடி: எரிந்து நாசமான டூவீலர்கள்!

திருவள்ளூர், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலையில், சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். பொங்கலை முன்னிட்டு, கடந்த 13ம் தேதி முதல் கடை மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடை முன் சர்வீஸ் செய்ய நிறுத்தப்பட்டு இருந்த, இரண்டு ஸ்கூட்டர்கள் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகின. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 18, 2026
திருவள்ளூர்: ராட்சத அலையில் சிக்கிய டிரைவர் பலி!

சோழவரம், ஆங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அஜித் குமார் (30). டிரைவராக உள்ளார். நேற்று காணும் பொங்கலையொட்டி காட்டுப்பள்ளி கடற்கரை பகுதிக்கு சென்றார். அங்கு அவர் குளிப்பதற்காக கடலில் இறங்கிய போது ராட்சத அலையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட அஜித்குமார், பரிதாபமாக பலியானார். கரை ஒதுங்கிய அஜித்குமாரின் உடலை காட்டூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 18, 2026
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.


