News November 25, 2025

திருவள்ளூர்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

திருவள்ளூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கு <<>>கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 21, 2026

திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் பாபு(50). நேற்று முன் தினம் அவரது வீட்டில், குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது, தனியாக இருந்த பாபு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 21, 2026

ஆவடி: மகனின் காதலால் தாய் தற்கொலை!

image

திருவள்ளூர்: ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை, மாங்குளம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பர்ஹான் அலி(61) – வஹிதா பானு(51). இவர்களுக்கு சாகித்(23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக, சாகித் தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த வஹிதா பானு அதிகப்படியான முடக்குவாத மாத்திரைகளை உண்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 21, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து அதிகாரிகளின் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஜன.20) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!