News June 7, 2024

திருவள்ளூர்: ஆள்மாறாட்டம் மூலம் ரூ.80 லட்சம் நிலம் அபகரிப்பு

image

அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பம் பகுதியில் முகைதீன் பாத்திமா பேபி (64) என்பவருக்கு ரூ.80 லட்சம் மதிப்பிலான 2,347 சதுரடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் தயாரித்து, செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பத்மநாதன் (49) என்பவர் சிலருக்கு விற்பனை செய்து விட்டார். புகாரின்பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து பத்மநாதனை நேற்று இரவு கைதுசெய்தனர்.

Similar News

News July 8, 2025

முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

முன்னாள் படைவீரர்/சார்ந்தோர்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக குறைபாடுகள்/சிரமங்கள் SPARSH இணையதளத்தில் ஏதேனும் இருப்பின் அதனை களைந்திடும் பொருட்டு கண்ட்ரோலர் ஒப்பி டேபின்ஸ் அக்கௌன்த்ஸ் தேனாம்பேட்டை திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகத்தில் ஜூலை 9,10 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News July 8, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் 120 முகாம்கள்

image

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், உங்களுடன்ஸ்டாலின்” என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முதற்கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை 120 முகாம்கள் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் பிரதாப் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!