News September 29, 2025
திருவள்ளூரில் 3,883 பேர் ஆப்சென்ட்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 645 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வுகள் நேற்று (செப்.28) தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கண்ட தேர்விற்கு 14,278 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 10,395 பேர் மட்டுமே தேர்வு எழுதினர் 3,883 பேர் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 9, 2025
ஆவடியில் துணை முதலமைச்சர் வருகை.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் வருகின்ற (24.11.2025) திங்கட்கிழமை அன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை தர உள்ளார் என்று அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வந்துள்ளது. இதையடுத்து அதற்கான அரசு பணிகள் நடந்து வருகிறது.
News November 8, 2025
திருவள்ளூரில் இன்று ரோந்து காவலர்களின் விபரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (8.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News November 8, 2025
திருவள்ளூர்: பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <


