News October 12, 2025

திருவள்ளூரில் வெள்ளப்பெருக்கு! போக்குவரத்து பாதிப்பு

image

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த மழையால், பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் இருந்து சில தினங்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, சத்தரை பகுதியில் கூவம் ஆற்றில் அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை வெள்ளநீரால் சேதமடைந்தது. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் பேரம்பாக்கம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Similar News

News November 10, 2025

திருவள்ளூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News November 10, 2025

புழல் ஏரியின் இன்றைய நீர் இருப்பு நிலவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியின் இன்றைய(நவ.10) நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி கொண்ட ஏரியில் தற்போது 2866 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே உள்ளது. 155 கனஅடி நீர் வரத்து பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குடிநீர் பயன்பாட்டுக்காக 709 கனஅடி வெளியேற்றம் செய்யப்படுகிறது.

News November 10, 2025

திருவள்ளூர்: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!