News April 7, 2024
திருப்பூர்:305 தபால் வாக்குகள் சேகரிப்பு

காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கயம், வெள்ளகோவில், முத்தூர், சென்னிமலை ஆகிய பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கடந்த மூன்று நாட்களாக தபால் வாக்கு பதிவு பெறப்பட்டது. மாற்றுத்தறனாளிகள் மற்றும் 85 வயதுடைய மூத்த குடிமக்கள் உள்ள வீடுகளில் நேரில் வாக்கு சேகரிப்பு நடத்தினர். இதில் மொத்தம் 315 வாக்குகளில் நேற்று வரை கடந்த 3 நாட்களில் 305 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர்.
Similar News
News February 7, 2026
திருப்பூர்: இலவச வீடு.. எப்படி விண்ணப்பிக்கலாம்

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (Share)
News February 7, 2026
தாராபுரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து

தாராபுரம் – உடுமலை சாலையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட் அருகே நேற்று இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தாராபுரம் GH-க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
News February 6, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.06) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.


