News November 19, 2025
திருப்பூர்: ரூ.85,000 வரை சம்பளம்.. அரசு வேலை!

திருப்பூர் மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவ.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். யாருக்காவது பயன்படும் அதிகமாக SHARE பண்ணுங்க!
Similar News
News January 19, 2026
பல்லடம்: நள்ளிரவில் பரபரப்பு சம்பவம்!

பல்லடம் நகராட்சி 6வது வார்டு கரையாம்புதூர் பகுதியில், நள்ளிரவு நேரங்களில் திருடர்கள் டார்ச் லைட் அடித்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுச் செல்கின்றனர். பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்களின் வீடுகளைக் குறிவைத்து இச்செயல் நடப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் உரிய விசாரணை நடத்தி, திருடர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News January 19, 2026
வெள்ளகோவில் அருகே வசமாக சிக்கிய கும்பல்: அதிரடி கைது

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சுற்று வட்டாரத்தில் சட்ட விரோதமாக சீட்டாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சின்னம்மன் கோவில் பாளையத்தில் போலீசார் ரோந்து மேற்கொண் டனர். அங்கு பணம் வைத்து விளையாடி வந்த கணேசன், 54, செல்லமுத்து, 55 உட்பட, 15 பேரை போலீசார் கைது செய்து, 4 லட்சத்து, 21 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்
News January 19, 2026
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (ஜன.18) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.


