News June 3, 2024
திருப்பூர்: மது குடிக்க பணம் தராததால் வாலிபர் விபரீதம்

காங்கேயம் அருகே பாப்பினி பச்சாபாளையத்தை சேர்ந்தவர் சரண் (21). குடிப்பழக்கம் கொண்ட இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு கணையம், நுரையீரல் பாதிப்படைந்துள்ளது. சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை அவரது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுக்கவே வாலிபர் சரண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News July 8, 2025
திருப்பூர் திமுகவில் கோஷ்டி பூசல்?

திருப்பூர் வடக்கு மாவட்டம் வடக்கு மாநகர செயலாளராக இருப்பவர், திமுக இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ். இவர் இரண்டு திமுக வார்டு கழகச் செயலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இவரை கட்சி பதவிகளிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News July 8, 2025
தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோயில்!

திருப்பூர் தாளக்கரையில் பழமையான லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். கடன் தொல்லையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News July 8, 2025
டிகிரி, இன்ஜினியர் படித்தவர்களுக்கு அரசு வேலை

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ, இன்ஜினியரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு திருப்பூரில் வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு <