News June 17, 2024

திருப்பூர்: ஏடிஎம் கார்டு மோசடி… ஒருவர் கைது

image

தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற முத்துராஜ் என்பவருக்கு பணம் வராததால் அருகில் இருந்த மர்ம நபர் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு வேறு மையத்தில் பணம் எடுக்குமாறு சொன்னார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் போலீசில் புகாரளித்தார். இது குறித்த புகாரின்பேரில் பன்னீர்செல்வம் என்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News January 17, 2026

காங்கயம்: 6 வயது சிறுவன் உயிரிழப்பு

image

ஈரோட்டை சேர்ந்த லோகநாதன், காங்கயம் நாட்டார்பாளையத்தில் தங்கித் தேங்காய் களத்தில் வேலை செய்து வருகிறார். இவரது 6 வயது மகன் அஸ்வித், கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. காங்கயம் GHக்குக் கொண்டு சென்றும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 17, 2026

குண்டடத்தில் மனைவி கொலை: கணவர் அதிரடி கைது

image

குண்டடம் அருகே பூங்கொடி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து குண்டடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவரது கணவர் அங்கமுத்து குருசாமி மனைவியைக் கட்டையால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நேற்று அவரை முதல் குற்றவாளியாகக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News January 17, 2026

திருப்பூரில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

image

திருப்பூர் தென்னம்பாளையத்தில் ஒரு வீட்டில் தெற்கு போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு பணம் வைத்து சூதாடிய 5 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,300-ஐ பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(50), சுரேந்தர்(21), வெங்கடாசலம்(44), ராமசாமி(52), செந்தில்(52) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!