News August 7, 2024
திருப்பூரில் தாய்ப்பால் வார விழா கொண்டாட்டம்

உலக தாய்ப்பால் வார விழா திருப்பூர் மாவட்டத்தில் 1 வாரம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் இன்று வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் வழங்கினார். மேலும், தாய்ப்பால் தானம் கொடுத்த தன்னார்வலர்களுக்கு சாண்றிதறழ்களும் வழங்கப்பட்டது.
Similar News
News November 12, 2025
திருப்பூர் மக்களே: ரூ.56,000 சம்பளத்தில் அரசு வேலை!

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் சுங்க வரித்துறையில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது. மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News November 12, 2025
காங்கேயத்தில் விபரீதம்: மதுவால் வந்த வினை!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் – பழையகோட்டை சாலையில் ராஜிவ் நகர் பகுதியில், தனியார் அரிசி ஆலையில் குடும்பத்துடன் தங்கி, வேலை பார்த்து வருபவர் ராஜ்குமார் (21). இவர் நேற்று இவரது தந்தையிடம் மது குடிக்க ரூ. 200 கேட்டதாக கூறப்படுகிறது. பணம் தராததால் மனமுடைந்த ராஜ்குமார் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 12, 2025
திருப்பூர் அருகே சோகம்: கிணற்றில் தவறி விழுந்து பலி

ஈரோடு நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(72). இவர் வேலை காரணமாக குன்னத்தூர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது காக்காளான் தோட்டம் அருகே வரும்போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஊத்துக்குளி தீயணைப்பு படை வீரர்கள் உடலை மீட்டு, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


