News November 14, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள்

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்ற செயல்களை தடுக்கவும் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகரில் உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் ஜெயபாலன் தலைமையில் கொங்கு நகர் மற்றும் அனுப்பர்பாளையம் சரகத்திலும், சேகர் மற்றும் ஜான் ஆகியோர் தலைமையில் நல்லூர் மற்றும் கே வி ஆர் நகர் சரகத்திலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News December 11, 2025
திருப்பூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருப்பூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 11, 2025
திருப்பூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.27ம் தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 3மணி வரை, எல் ஆர் ஜி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், 10th, +2, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வித்தகுதி கொண்டவர்களும் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் டிச.23க்குள் இந்த லிங்கை <
News December 11, 2025
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வரும் 13ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு, ரேஷன் கார்டுகளில், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் புதிய ரேஷன் கார்டு போன்ற கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என திருப்பூர் கலெக்டர் மனிஷ் தெரிவித்துள்ளார்.


