News October 20, 2025
திருப்புவனம் நகரில் நீர் புகும் அச்சம்

திருப்புவனம்: நகரை ஒட்டிய நீர் வரத்து கால்வாய்களில் மணல் திருட்டு அதிகரித்ததால் கரைகள் பலவீனமடைந்துள்ளன. வடகிழக்கு மழையால் வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்படவுள்ள நிலையில், பிரமனூர் கால்வாய் வழியாக அதிவேகமாக நீர் பாயும் அபாயம் நிலவுகிறது. இதனால் வண்டல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நீர் நகரில் புகும் அச்சம் எழுந்துள்ளது. மணல் திருட்டை தடுத்து கரைகள் சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News December 8, 2025
சிவகங்கை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News December 8, 2025
சிவகங்கையில் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு.!

சிவகங்கை பாஜகவின் மூத்த தலைவரான எச். ராஜா டிசம்பர்-04 ஆம் தேதி காரைக்குடியில் இருந்து மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அப்போது திருப்பத்தூர் அருகே போலீசார் தடுத்து நிறுத்திய போது போலீசாரிடம் வாக்குவாதம் செய்து, மதவாதத்தை தூண்டும் வகையில் பேசினார். அதன் பேரில் போலீஸார் எச். ராஜா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News December 8, 2025
சிவகங்கையில் இங்கெல்லாம் மின்தடை.!

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை, செவ்வாய்க்கிழமை டிச-09 மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீராம்நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, நெற்புகப்பட்டி
சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 2மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்செயற்பொறியாளர் லதா தேவி அறிவித்துள்ளார்.


