News November 25, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (நவ.25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
Similar News
News January 25, 2026
திருப்பத்தூர் மக்களே OTP வருதா? ALERT!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
News January 25, 2026
திருப்பத்தூரில் கொலை வெறி தாக்குதல்!

வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரை முன்விரோதம் காரணமாக நேற்று (ஜன.24) இரவு மூன்று இளைஞர்கள் வீடு புகுந்து தாக்கி, வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றனர். இதில் காயமடைந்த ஏழுமலை, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, வாணியம்பாடி கிராமிய போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
News January 25, 2026
திருப்பத்தூர்: கை குழந்தையுடன் பெண் கதறல்!

பொன்னேரியை சேர்ந்தவர் அகிலா. இவரது கணவர் தியாகராஜன். கணவன் மனைவி இடையே பிரச்சனை காரணமாக அகிலாவை அவரது கணவர் வீட்டில் சேர்க்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவனுடன் சேர்த்து வைக்க கோரி திருப்பத்தூர் கோர்ட்டில் அகிலா வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் கணவன் வீட்டின் முன் கை குழந்தையுடன் தனது 35 பவுன் நகையை மீட்டு தரக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


