News August 6, 2024
திருப்பத்தூர் அருகே டெல்லி குழுவினர் வீடு வீடாக ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் டெல்லி சிறப்பு குழுவினர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் முறையாக குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கிறதா எனும் நோக்கில் வீடு வீடாக ஆய்வு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுகாதார வளாகம், அங்கன்வாடி கட்டிடம்,குடிநீர் தொட்டி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். உடன் ஊராட்சித் தலைவர் அனிதா மோகன் இருந்தார்.
Similar News
News January 14, 2026
திருப்பத்தூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

திருப்பத்தூர் மாவட்ட மக்களே! ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News January 14, 2026
திருப்பத்தூர்: கத்திக் குத்தில் முடிந்த வாக்குவாதம்!

அம்பலூர் அடுத்த கவுக்காப்பட்டு பகுதியில் நேற்று (ஜன.13) இரவு முன்விரோதம் காரணமாக இருபிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி கத்தி மற்றும் இரும்பு கம்பியால் இரு பிரிவினருக்கிடையே தாக்குதல் ஏற்பட்டது. இதில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
News January 14, 2026
திருப்பத்தூர்: மது போதையில் வாலிபர்கள் அட்டூழியம்!

தேவலாபுரம் அடுத்த ஸ்டார் சிட்டி பகுதியில் நேற்று முன்தினம் (ஜன.12) இரவு அஸ்ரத் (22), அம்பேத்கர் நகரை சேர்ந்த நாகப்பன் (21), எல்.மாங்குப்பத்தை சேர்ந்த நிதிஷ் (20) ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அஸ்ரத்தாய் மற்ற இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.


