News November 14, 2025
திருப்பத்தூர் அரசு பள்ளி மாணவி சாதனை!

கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணால பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி எஸ்.ஜீவிதா (13-11-2025), திருச்சியில் நடைபெற்ற தமிழக அரசு நடத்தும் இலக்கிய மன்ற போட்டியில் கவிதை எழுதுதல் எனும் தலைப்பில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் எஸ். ஜீவிதா என்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.
Similar News
News December 16, 2025
திருப்பத்தூர்: கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த சடலம்

ஆலங்காயம், துரிஞ்சிகுப்பம் பகுதியில் நேற்று (டிச.15) கழுத்தில் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள், ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
News December 15, 2025
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருப்பத்தூர், இன்று டிச.15 இரவு முதல் காலை 6 மணி வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவர்களில் தொலைபேசி எண் மேலே குறிப்பிட்டுள்ளது. இரவில் தனியாக வேலைக்கு செல்லூம் பெண்கள், ஆண்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
News December 15, 2025
திருப்பத்தூரில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவரா நீங்கள்?

திருப்பத்தூர் மக்களே, தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டிச.20 ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 5000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும், விவரங்களுக்கு இங்கு <


