News June 1, 2024
திருநெல்வேலி கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் சிறப்பு!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கூந்தங்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம். இதன் பரப்பளவு 1.2933 சகிமீ ஆகும். இப்பகுதி 1994-ஆம் ஆண்டு பறவைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இங்கு 43 இனத்தைச் சேர்ந்த பறவைகள் வருகின்றன. நீண்டு மெலிந்த சிவந்த கால்களையும், மெல்லிய குழல் போன்ற வளைந்த கழுத்தையும், ரோசா வண்ணத்தையும் ஒத்த பூநாரைகள் இங்கு வந்து செல்வது மிகவும் சிறப்பானது.
Similar News
News July 11, 2025
பயறு வகை, காய்கறி விதைகள் பெற மக்களுக்கு வசதி

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தில் பயறு வகை விதைகள், காய்கறி விதைகள், பழச்செடிகள் தொகுப்பு பெற வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விதைகளை இல்லங்களில் நடவு செய்ய ஏதுவாக இடம் உள்ளவர்கள் மற்றும் உழவர் பெருமக்கள் பயன்பெற உழவன் செயலியில் அல்லது https://tnhorticulture. tn. gov. in என்ற வலைதளம் மூலமாகவோ பதிவு செய்து பயன்பெறலாம். என கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித
News July 11, 2025
நெல்லை: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

➡️நெல்லையில் 132 மையங்களில் 36,011 பேர் நாளை குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!
News July 11, 2025
நெல்லையில் ரூ,15 லட்சம் வரை விபத்து காப்பீடு

நெல்லை மாவட்டத்தில் 449 தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 – 65 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.