News November 26, 2025
திருச்சி: லஞ்சம் வாங்கிய விஏஓ-க்கு சிறை!

முசிறி, கீழத்தெருவைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் என்பவர் ரூ.700 லஞ்சம் பெற்ற வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் உறுதிசெய்யப்பட்டதால் விஏஓ செல்வராஜுக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
Similar News
News January 21, 2026
திருச்சி: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகளையும் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இல்லை என்றால் இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்கவும்.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3. DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4. POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5. BHIM UPI – வங்கி பரிவர்த்தனை
6. M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். SHARE IT
News January 21, 2026
திருச்சி: தண்டவாளத்தில் தலை துண்டித்து பலி

மணப்பாறை ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தண்டவாளத்தின் குறுக்கே தலையை வைத்து படுத்துள்ளார். அப்போது ரயில் நிலையத்தில் நின்று புறப்பட்ட ரயில் ஏறியதில், தலை துண்டித்து, பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News January 21, 2026
திருச்சி – காரைக்கால் ரயில் ரத்து

திருச்சி – காரைக்கால் ரயில் நான்கு தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் 22, 24, 27, 29 ஆகிய தேதிகளில், தஞ்சாவூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


