News August 6, 2025

திருச்சி: பொதுத்தேர்வு அசல் சான்றிதழ் நாளை விநியோகம்

image

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (ஆக.07) முதல் விநியோகிக்கப்பட உள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். இது குறித்த மேலும் தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 14, 2025

திருச்சி: நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்!

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி, கொப்பம்பட்டி, எடமலைப்பட்டி புதூர், திருச்சி, மன்னார்புரம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (நவ.15) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக முசிறி, உப்பிலியபுரம், நாரசிங்கபுரம், சொக்கலிங்கபுரம், ஜாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்!

News November 13, 2025

திருச்சி: கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மாதாந்திர பணியாளர் நாள் குறைதீர் கூட்டம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் நாளை (நவ.14) நடைபெற உள்ளது. இதில், ஊழியர்கள் தங்களது குறைகளை நேரிலோ அல்லது <>https://rcs.tn.gov.in <<>>என்ற தளத்திலோ பதிவு செய்து பயன்பெறலாம் என கூட்டுறவு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 13, 2025

திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!