News August 9, 2025

திருச்சி: புலனாய்வு துறையில் வேலை; நாளை கடைசி நாள்

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.10) கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க !

Similar News

News November 10, 2025

திருச்சியில் நாளை பவர் கட்!

image

திருச்சி மெயின்கார்டுகேட் மற்றும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நாளை (நவ.11) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் கரூர் பைபாஸ்ரோடு, சத்திரம் பஸ் நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை, உறையூர் ஹவுசிங் யூனிட், கம்பரசம்பேட்டை, ஜீயபுரம், அரியமங்கலம், வேங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 – 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News November 10, 2025

திருச்சி: காவிரி ஆற்றில் மிதந்த பிணம்

image

முசிறி பரிசல்துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தண்ணீரில் மிதப்பதாக முசிறி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 10, 2025

திருச்சி அருகே சிக்கிய திருட்டு கும்பல்

image

உப்பிலியபுரம் அடுத்த நாகநல்லூர் ஊராட்சியை சேர்ந்த குமரவேல் (40) என்பவற்றின் டூவீலர் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட கோபி (29), புத்த பிரகாஷ் (29), அஜித் (28), ஹரிகரன் (20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 டூவீலர்கள், ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஒரு மொபட் என மொத்தம் 12 இருசக்கர வாகனங்கள் மீட்டனர்.

error: Content is protected !!