News April 12, 2024

திருச்சி: பிரியாணி செய்யும்போது தீ விபத்து

image

மணிகண்டம் அருகே உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் அப்துல் சமது (60), இவரது மனைவி தாஜு நிஷா (53). நேற்று காலை 11 ரம்ஜான் பண்டிகையொட்டி கேஸ் அடுப்பில் பிரியாணி சமைத்துள்ளார். அப்போது திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். காயமடைந்த தாஜூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News

News November 8, 2025

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று ஊஞ்சல் உற்சவம்!

image

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்களுக்கு நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு நிகழ்வானது இன்று நவ.8ஆம் தேதி தொடங்கி, வருகிற 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மாலை 5 மணி அளவில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின், இரவு 7.15 க்கு ஊஞ்சல் உறசவம் நடைபெறும்.

News November 8, 2025

திருச்சி: மருத்துவர் வீட்டில் 8 சவரன் நகை திருடியவர் கைது

image

திருச்சி, புத்தூர் ஆபிஸர்ஸ் காலனியை சேர்ந்தவர் பாலாஜி(30). மருத்துவரான இவரது வீட்டில் பாண்டியன்(28), என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் பாலாஜி வீட்டில் 8 சவரன் நகை திருட்டு போய் உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பாண்டியன் நகையை திருடியது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் பாண்டியனை கைது செய்தனர்.

News November 8, 2025

திருச்சியில் வெளிநாட்டு வாலிபர் பலி

image

இலங்கையை சேர்ந்தவர் வாலிபார் லுக்சானன்(19). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் திருச்சியில் உள்ள அண்ணாமலை நகரில் கார்த்திக் என்பவரை பார்க்க வந்தபோது, அங்கு மின் ஒயர் எதிர்பாராமல் மேல பட்டுள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். பின் திருச்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!