News October 1, 2025
திருச்சி: சிறை காவலர்கள் பணியிடை நீக்கம்

திருச்சி மத்திய சிறையில் சுமார் 750 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் ஆயுள் தண்டனை கைதியான திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் மாலை தப்பி ஓடியுள்ளார். இவரைப் பிடிக்க 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர்கள் பிரசாத், சுதாகர் ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 7, 2025
திருச்சில் அரிய வாகை ஆமைக் குஞ்சுகள் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுபிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அதில் மலேசியாவை சேர்ந்த இரு பயணிகள் கடத்திவந்த 5,061 ஆமைக்குஞ்சுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஆமைக்குஞ்சுகளை கடத்திவந்த இரண்டு பேரிடமும் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 7, 2025
திருச்சி: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

திருச்சி மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <
News December 7, 2025
திருச்சி: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <


