News January 25, 2026
திருச்சி: கொலை வழக்கில் நான்கு பேர் கைது

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல்காரன்பட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர், கடந்த 19ஆம் தேதி வீட்டில் உறங்கிய நிலையில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை புத்தாநத்தம் காவல் துறையினர், இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். துரிதமாக செயல்பட்ட காவலர்களை திருச்சி மாவட்ட எஸ்பி பாராட்டினார்.
Similar News
News February 16, 2026
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 723 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பென்சன் நிலுவை தொகை, நில ஆக்கிரமிப்பு தொடர்பான மனுக்கள், வேலைவாய்ப்பு கோரிக்கை, மருத்துவம் மற்றும் இதர பணி தொடர்பான மனுக்கள் என 723 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News February 16, 2026
திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News February 16, 2026
திருச்சி – காரைக்கால் டெமு ரயில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி – காரைக்கால் டெமு ரயில் வரும் 17, 18, 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


