News November 3, 2025

திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 554 மனுக்களுக்கு தீர்வு

image

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய தண்ணீர் இணைப்பு, தொகுப்பு வீடு மனு, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள் உள்ளிட்ட 554 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 11, 2025

திருச்சி: ரயில்வேயில் வேலை.. ரூ.29,735 சம்பளம்!

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK<> HERE<<>> .
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 11, 2025

திருச்சி இளைஞர் கொலை: குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு

image

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று இரவு ஒருவரை போலீசார் சுட்டுப் பிடித்த நிலையில், தலைமறைவாக இருந்த திருவானைக்காவலை சேர்ந்த நந்தகுமார், ரவுடி பிரபாகரன், கணேஷ் ஆகிய 3 பேர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது தவறி விழுந்ததில், மூவருக்கும் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News November 11, 2025

திருச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9489048910. SHARE NOW

error: Content is protected !!