News October 20, 2025

திருச்சி: கடும் விலை உயர்வு!

image

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சியில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று 1 கிலோ மல்லிகை பூ ரூ.3,000-க்கும், முல்லைப் பூ ரூ.3,000-க்கும், ஜாதிப் பூ ரூ.2,000-க்கும், செவ்வந்தி பூ ரூ.1000-க்கும் விற்பனையானது. இதனால் மார்க்கெட்டில் பூ வாங்க பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பூக்களின் வரத்து குறைவே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News December 12, 2025

திருச்சி: ஊராட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் ஊராட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புத்தாநந்தம் ஊராட்சி புத்தாநத்தம்-9, இடையப்பட்டி-12 எனவும், கண்ணுடையான்பட்டி ஊராட்சி, கண்ணுடையான்பட்டி-12, முத்தபுடையான்பட்டி-12 எனவும், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி கிருஷ்ணசமுத்திரம்-7, செம்மங்குளம்-1 எனவும், இனாம் குளத்தூர் ஊராட்சி ஆலம்பட்டி புதுார்-9, இனாம்குளத்துார்-2 எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2025

திருச்சி: Apply பண்ணா போதும்.. வேலை ரெடி!

image

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 12, 2025

திருச்சி: கடன் தொல்லையால் விபரீத முடிவு

image

செங்காட்டுப்பட்டி அடுத்துள்ள கீரம்பூர் காலனியில் வசிப்பவர் ராஜேந்திரன் இவர் தனது மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று அருகே உள்ள தம்பு என்பவருடைய வயலில் இறந்த நிலையில் இருபதை கண்டவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். விசாரணையில் இவர் கடன் தொல்லையால் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து இவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

error: Content is protected !!