News April 9, 2024
திருச்சி அருகே துடிதுடித்து மரணம்

திருச்சி நாவலர் நாடு உலகநாத புரத்தைச் சேர்ந்த மோகன் குமார் 40. எலக்ட்ரிஷன் ஆக வேலை பார்த்து வருகிறார் .நேற்று மோகன் உறையூர் காசிசெட்டி தெருவில், வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமணையில் சேர்த்தனர், சிகிச்சை பலனின்றி இறந்தார். மோகன் மனைவி கீதா கொடுத்த புகாரின்பேரில் உறையூர் போலீஸ் வழக்கு பதிவு.
Similar News
News December 14, 2025
திருச்சி: கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன் கைது

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் கடந்த 2021-ம் ஆண்டு திருவெறும்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து கர்ப்பமாக்கியுள்ளார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ள அப்பெண் வற்புறுத்தியபோது, தலைமறைவான விஜய் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் விஜய்யை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News December 14, 2025
திருச்சி: லாரி மோதி இளைஞர் பலி

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் முகமது ஆசிப் (20). இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் கொட்டப்பட்டு குளம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி ஒன்று ஆசிப் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முகமது ஆசிப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
திருச்சி: டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

மணப்பாறையைச் சேர்ந்த முகமது அஷ்ரப் அலி நேற்று டூவீலரில் துவரங்குறிச்சி மணப்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது எதிர் திசையில் சரக்கு வாகனம் ஓட்டி வந்த நல்லுசாமி முகமது டூவீலர் மீது மோதியதில் அவர் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் நல்லுசாமியை நேற்று கைது செய்தனர்.


