News August 6, 2025
திருச்சியில் தாழ்தள பேருந்துகள் விரைவில் அறிமுகம்

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சி, சேலம், நெல்லை மாநகரங்களில் தாழ்தள பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மண்டலத்துக்கு 25 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதி சான்று பெற்றவுடன் இந்த பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 11, 2025
வேலைவாய்ப்பு: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் புதிதாக யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு பயிற்சி அளிக்க யோகா பிரிவில் பட்டம் பெற்ற யோகா பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை நாளை ந்வ.12ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் வந்து வழங்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
திருச்சி: ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு

திருச்சியில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்- I வரும் 15 ஆம் தேதி 14 தேர்வு மையங்களிலும், தாள் – II வரும் 16 ஆம் தேதி 51 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ளது. இதில், தாள் I – 3946 பேரும், தாள் II – 15,286 பேரும் எழுத உள்ளனர். இந்நிலையில், தேர்வு மையங்கள் பறக்கும் படையினர் மூலம் கண்காணிக்கப்படும். நுழைவு சீட்டு மற்றும் விவரங்களுக்கு 18004256753 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
திருச்சியில் காலை கொலை; நண்பகல் குற்றவாளிகள் கைது

திருச்சி, பீமநகர் மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் இன்று காலை ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட மோதலால் தாமரைச்செல்வன் என்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ், பிரபாகரன், நந்து, கணேசன் உள்ளிட்டோரை சில மணி நேரங்களில் திருச்சி மாநகர போலீசார் அதிரடியாக விரட்டிச் சென்று கைது செய்தனர்.


