News March 25, 2024
திருச்சி:முன்னாள் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு

திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கர்நாடகா தண்ணீர் தராததால் மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர் நிலம் கருகியது.ஆனால் அவர் தண்ணீர் கேட்டு தரவில்லை. ஸ்டாலினுக்கு அதிகாரம் தான் முக்கியம்.நாட்டு மக்கள் முக்கியமல்ல. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி கூடவழங்கவில்லை.தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என கூறினார்.
Similar News
News November 8, 2025
நவல்பட்டு: பெரிய சூரியூரில் கபடி போட்டி அறிவிப்பு

திருச்சி மாவட்டம், நவல்பட்டு அடுத்த பெரிய சூரியூர் கிராமத்தில், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர் பேரவை சார்பில் நடத்தப்படும் முதலாம் ஆண்டு கபடி திருவிழா வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசாக ₹.1 லட்சம், 2-ம் பரிசாக ₹.70,000, 3-ம் பரிசாக ₹.50,000, 4-ம் பரிசாக ₹.50,000 வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 73733 84540, 86754 90655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று ஊஞ்சல் உற்சவம்!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்களுக்கு நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு நிகழ்வானது இன்று நவ.8ஆம் தேதி தொடங்கி, வருகிற 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மாலை 5 மணி அளவில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின், இரவு 7.15 க்கு ஊஞ்சல் உறசவம் நடைபெறும்.
News November 8, 2025
திருச்சி: மருத்துவர் வீட்டில் 8 சவரன் நகை திருடியவர் கைது

திருச்சி, புத்தூர் ஆபிஸர்ஸ் காலனியை சேர்ந்தவர் பாலாஜி(30). மருத்துவரான இவரது வீட்டில் பாண்டியன்(28), என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் பாலாஜி வீட்டில் 8 சவரன் நகை திருட்டு போய் உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பாண்டியன் நகையை திருடியது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் பாண்டியனை கைது செய்தனர்.


