News January 10, 2025
திருக்காட்டுப்பள்ளி அருகே தந்தைக்கு அரிவாள் வெட்டு: மகன் கைது

நேமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கிலிமுத்து (60). இவர் தனது ஆட்டுக்குட்டி சரியாக கவனிக்காததால் இறந்து விட்டதாக தன் மகன் கார்த்தியை (38) கண்டித்தாராம். இதில் ஆத்திரமடைந்த கார்த்தி கையில் இருந்த அரிவாளால் தந்தையை வெட்டியதில் அவர் பலத்த காயம் அடைந்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்தபுகாரின் பெயரில் கார்த்தியை கைது செய்தனர்.
Similar News
News November 11, 2025
தஞ்சை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<
News November 11, 2025
தஞ்சை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

தஞ்சை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News November 11, 2025
தஞ்சை: கிரிக்கெட் வீரராக மாற வாய்ப்பு!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், எஸ்.எஸ்.ராஜன் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிக்கு தஞ்சை மாவட்ட வீரர்கள் தேர்வு வரும் நவ.16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தஞ்சை பரிசுத்தம் நகரில் அமைந்துள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 1/9/1985-க்கு பிறகு பிறந்தவர்களும், 31/08/2012-க்கு முன்பு பிறந்தவர்கள் பங்கேற்கலாம் என தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.


